facebook-round

img

இப்போ மோடி கிட்ட கேட்கிறது என்னான்னா...



எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்கமுடியாது. அப்படி தீவிரவாதியாக இருப்பவர் இந்துவாக இருக்க முடியாது என்று சமீபத்தில் கமலஹாசனுக்கு உபதேசம் செய்து இருக்கிறார் பிரதமர்.

சரி. இந்தப் படத்தில் இருப்பது நாதுராம் கோட்சேவின் அஸ்தி சொம்பு. இதை நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். கோட்சேவின் கனவான அகண்ட பாரதத்தை அமைத்த பிறகுதான் இந்த அஸ்தியை கரைப்பது என்று சபதம் செய்திருக்கிறார்கள். ( குதிரைக்கு கொம்பு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்லதான் முளைக்க முடியும் )

காந்தியை தீர்த்துக் கட்ட வேண்டும் என்பது ஆர்எஸ்எஸின் முடிவு. அந்த முடிவை செயல்படுத்திய விசுவாசத் தொண்டன் கோட்சே. அதனால்தான் கோட்சேவின் சாம்பலை இன்னமும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். எனவே காந்தியைக் கொன்றது ஒரு ஆர்எஸ்எஸ்காரன்தான் என்பது உறுதியாகிவிட்டது. கோட்சே தனது 92 பக்க வாக்குமூலத்தில் இரண்டாவது வரியிலேயே "நான் ஒரு இந்து "என்று தெளிவாக குறிப்பிடுகிறான்.

இப்போ மோடி கிட்ட கேட்கிறது என்னான்னா....

1. காந்தியை சுட்டுத்தான் கொன்றார்கள் என்பதையாவது ஒத்துக்கறீங்களா..?

2. அப்படி சுட்டது கோட்சேதான் என்பதையாவது ஒத்துக்கறீங்களா..?

3. கோட்சே ஒரு ஆர்எஸ்எஸ் காரன் என்பதையாவது ஒத்துக்கறீங்களா..?

4. அந்த ஆர்எஸ்எஸ்காரன் ஒரு தீவிரவாதி என்பதையாவது ஒத்துக்கிறீங்களா..?

5. அந்த தீவிரவாதி ஒரு இந்து என்பதையாவது ஒத்துக்கிறீங்களா..?

6. அல்லது இது எதுவுமே எனக்குத் தெரியாது ... நான் அப்போது ஜப்பானில் கராத்தே கத்துக்க போயிருந்தேன் என்று சொல்லி கதையை முடித்து விடுகிறீர்களா..!

;